தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் வந்தன

தென்கொரியாவில் இருந்து தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.
பி.சி.ஆர் கருவிகள்
பி.சி.ஆர் கருவிகள்

தென்கொரியாவில் இருந்து தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. 

முன்னதாக, தமிழகத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க தென்கொரியாவிடம் 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது தமிழக அரசிடம் 5.60 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தற்போது மேலும் ஒரு லட்சம் கருவிகள் வந்துள்ளது பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 30,000க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com