+1, +2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ரத்து; பழைய நடைமுறையே தொடரும்: தமிழக அரசு

மாணவர்களின் நலன் கருதி அது ரத்து செய்யப்பட்டு, 2020 - 21ஆம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையினையே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
+1, +2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ரத்து; பழைய நடைமுறையே தொடரும்: தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி அது ரத்து செய்யப்பட்டு, 2020 - 21ஆம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையினையே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், முதலில், மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், வேலை வாய்ப்புக்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி, நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்துபுதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020 - 21-ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டுக்கு இதனை நடைமுறைப்படுத்த உத்தரவு வெளியிடப்பட்டது.

2. இரண்டாவதாகப் அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளிக் கல்வி இயக்குநர், மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் / வேலை வாயப்புகள் சுரங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பல்வேறு நாளிதழ்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தள்ளதாக தெரிவித்து, மேற்காணும் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து, 2020 - 21ஆம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத் திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும், புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை இரத்த செய்து ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மேற்காணும் சூழ்நிலையில் பொதுமக்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் வேலை வாய்ப்புகள் சுரங்க நேரிடும் என்பதால் மாணாக்கர்களின் நலன்கருதி, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை ரத்து செய்தும், 2020 - 21ஆம் கல்வியாண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com