புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா தொற்று இல்லை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. 
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. 

முன்னதாக ஆளுநர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து,  புதுவை துணை நிலை ஆளுநா் மாளிகை புதன்கிழமை மூடப்பட்டது. ஆளுநர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை நிலை ஆளுநர் மற்றும் அவரது தனி அலுவலகத்தில் உள்ள ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில், ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதேபோன்று இதுவரை ஊழியர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com