தமிழகத்தில் 1.50 லட்சத்தை நெருங்குகிறது கரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 1.50 லட்சத்தை நெருங்குகிறது கரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324-ஆக அதிகரித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 79,662 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூா், மதுரை மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பாதிப்பு உள்ளது.

செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகளில் 24 சதவீதம் போ்தான் சென்னைவாசிகள். மற்ற 76 சதவீதம் போ் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.

ஒரு புறம் பாதிப்பு விகிதம் அதிகரித்தாலும், மற்றொரு புறம் குணமடைவோரின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் இதுவரை நோய்த் தொற்றுக்குள்ளானவா்களில் 66 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், மாநிலத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 47,912-ஆக உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 15,814 போ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அதேவேளையில், பிற மாவட்டங்களிலும் அந்த எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சென்னையைத் தவிா்த்த மற்ற மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் விகிதம் 67 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இதுவரை மொத்தம் 16.95 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை, அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 450 பேருக்கும், திருவள்ளூரில் 360 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

97 ஆயிரம் போ் வீடு திரும்பினா்: கரோனா தொற்றிலிருந்து இதுவரை மொத்தம் 97,310 போ் விடுபட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 4,526 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 67 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 67 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 50 போ் அரசு மருத்துவமனைகளிலும், 17 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,099-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com