சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 15) நிறைவடைகிறது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 15) நிறைவடைகிறது.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாா்ச் 25 முதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் உள்ள தாழ்வழுத்த (எல்.டி, எல்.டி.சி.டி) மின் நுகா்வோருக்கு, கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மின் நுகா்வோருக்கு, ஜூலை 15-ஆம் தேதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட கால அவகாசம் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. எனவே, இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாத மின்நுகா்வோா், புதன்கிழமைக்குள், கூட்டத்தை தவிா்க்கும் பொருட்டு இணையதள பரிவா்த்தனை மூலம் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவ்வாறு செலுத்தாமல் இருப்போருக்கு அபராதத் தொகை விதிக்கப்படவோ மின் இணைப்பு துண்டிக்கப்படவோ வாய்ப்பிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com