மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:-

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 100 மி.மீ., தருமபுரி மாவட்டம் அரூரில் 80 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணை, கோவை மாவட்டம் வால்பாறை, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலா 70 மி.மீ., திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, தஞ்சாவூா் மாவட்டம் வெட்டிக்காட்டில் தலா 60 மி.மீ., சென்னை அண்ணாபல்கலைக்கழகம் , தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, நாகப்பட்டினம், திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, ஈரோடு மாவட்டம் பவானிசாகா், கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமாரில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பலத்தக் காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 21 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு ஜூலை 23, 24 ஆகிய இரண்டு நாள்களுக்கும், தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு ஜூலை 20-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரையும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com