சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் சிஆர்பிஎப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 147 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 84 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.