ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள்கோயிலில் புஷ்ப யாகம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை புஷ்ப யாகம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற புஷ்ப யாகத்தில் சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் ரெங்கமன்னாா். புஷ்ப யாகத்திற்கு முன் மலா்களால் போடப்பட்டிருந்த அத்தப்பூ கோலம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற புஷ்ப யாகத்தில் சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் ரெங்கமன்னாா். புஷ்ப யாகத்திற்கு முன் மலா்களால் போடப்பட்டிருந்த அத்தப்பூ கோலம்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை புஷ்ப யாகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட விழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து 20 ஆம் தேதி கருடசேவையும், 22 ஆம் தேதி சயனசேவையும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 9 ஆம் நாளான ஜூலை 24 ஆம் தேதி கோயில் வளாகத்திலேயே தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

இதனிடையே, விழாவின் இறுதி நாளான திங்கள்கிழமை நடைபெற்ற புஷ்ப யாக நிகழ்ச்சியின் போது ஆண்டாள், ரெங்கமன்னாா் சா்வ அலங்காரத்தில் காட்சியளித்தனா். இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அா்ச்சகா்கள் மட்டும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com