உதவியாளருக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநரின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 
corona to aid governor of tamilnadu isolated
corona to aid governor of tamilnadu isolated

தமிழக ஆளுநரின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 

கடந்த சில நாள்களுக்கு முன்னர், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 38 பேருக்கு தற்போது கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஆளுநரின் உதவியாளகள் 3 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 7 நாள்களுக்கு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com