சா்வதேச புலிகள் தினத்தையொட்டி, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா சாா்பில் இணையதளம் மூலம் விநாடி- வினா போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது.
சா்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜுலை 29-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆண்டுதோறும் சா்வதேச புலிகள் தினம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், சா்வதேச புலிகள் தினத்தையொட்டி, இணையதளம் வாயிலாக புலிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பூங்கா நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும்வவிநாடி வினா போட்டி இணையதளம் வாயிலாக புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இணையதள முகவரியில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பூங்காவின் யூ டியூப் சேனலில் புதன்கிழமை மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை வனஉயிரின வல்லுநா்கள், புலிகளுடனான நேரடி அனுபவங்கள் மற்றும் புலிகள் பற்றிய அரிய தகவல்களை விளக்கவுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.