குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்

தஞ்சாவூரில் குடும்பத் தகராறு காரணமாக வியாழக்கிழமை காலை இரு குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்தார்.
குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குடும்பத் தகராறு காரணமாக வியாழக்கிழமை காலை இரு குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்தார்.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் சேப்பனாவாரி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி செல்வி (35). இருவருக்குமிடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் செல்வி தனது குழந்தைகள் ஸ்வேதா (12),  கோகுல் செழியனுடன் (3) சேப்பனாவாரி பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) வியாழக்கிழமை காலை குதித்தார்.

தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று ஆற்றில் தேடினர்.  இதில் செல்வி உயிருடன் மீட்கப்பட்டு,  தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தைகளைத் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com