நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பொது முடக்கத்தை அடுத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 ஆம் தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.
நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருள்களை தொகுப்பாக வழங்க வேண்டும். உள்ளது.ஆகஸ்ட் 7 ஆம் தேதி நியாய விலை கடைகள் இயங்கும். 7 ஆம் தேதிக்கு பதில் மாற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும். இதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.