சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,735 ஆகக் குறைந்துள்ளது. கோடம்பாக்கத்திலும் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,734 ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை 1,117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 97,575- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 2,076 போ் உயிரிழந்துள்ளனா்.
90 ஆயிரத்தை எட்டியது: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தை எட்டியது.
இந்நிலையில் புதன்கிழமை 1,117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97,575-ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 82,764 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனா். 12,735 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் புதன்கிழமை 20 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 2,076- ஆக அதிகரித்துள்ளது.