சென்னையில் கரோனா தடுப்பு பணிகள்: முதல்வர் இன்று ஆய்வு

சென்னையில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை  ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் கரோனா தடுப்பு பணிகள்: முதல்வர் இன்று ஆய்வு


சென்னை: சென்னையில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை  ஆலோசனை நடத்துகிறார். சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் காலை 10.45 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்தின் போது, பல முக்கிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பும் மாநகராட்சி வளாகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com