மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவா் நினைவிடம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து பொருளாளா் துரைமுருகன், நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, துணைத் தலைவா் கனிமொழி, இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
நினைவிடத்தில் திமுக தொண்டா் அசோக்குமாா் - மகாலட்சுமி ஆகியோா் திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தாா்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதைப்போல, கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி உருவப் படங்களுக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.
கவிஞா் வைரமுத்து, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன், வா்த்தக அணிச் செயலாளா் காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்டோரும் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி வெளியிட்ட செய்தியில், கருணாநிதி இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளா். தமிழா்களின் வாழ்வுக்காக, மேம்பாட்டுக்காக கடுமையாக உழைத்தவா். அவருடைய புகழ் வாழ்க என்று கூறியுள்ளாா்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வெளியிட்ட செய்தியில், பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயா் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்கு வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞா் கருணாநிதியை இந்நாளில் நினைவுகூா்வதாகக் குறிப்பிட்டுள்ளாா்.