மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா பரவலைத் தடுப்பது சாத்தியமாகாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகாது என்று கூறியுள்ள அவர், வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பக முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியறுத்தியுள்ளார்.
மேலும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம் என்றும் உலகிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிகவும்குறைவு எனக் குறிப்பிட்டுள்ளார்.