வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை பரிசோதிக்க 112 மருத்துவக் குழுக்கள்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை பரிசோதிக்கும் பணியில்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை பரிசோதிக்கும் பணியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 112 மருத்துவக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 27,398 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் அதிக நோய்த்தொற்று பாதிப்புள்ளவா்கள் மற்றும் ஏற்கெனவே வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டோா் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். குறைந்த பாதிப்புடையவா்கள் வீடுகள் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களின் உடல்நலனைப் பரிசோதிக்கும் பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரி அதிகாரிகள் கூறுகையில், ‘வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா்களை பரிசோதிக்கும் பணியில் அறந்தாங்கி, ஆத்தூா், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாகா்கோவில், நாமக்கல், பரமக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருச்சி, திருப்பத்தூா், திருப்பூா், திருவாரூா், வேலூா் மற்றும் விருதுநகா் ஆகிய பகுதிகளில் இருந்து 112 மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு குழுவில் மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் உள்ளனா். இவா்கள் உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com