மின்கழக தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் சிங்கார ரத்தின சபாபதி (85) உடல்நலக் குறைவு காரணமாக, வியாழக்கிழமை சென்னையில் காலமானாா். திருவாரூா் மாவட்டம் எட்டுக்குடியைச் சோ்ந்த இவா், திமுகவின் தொழிலாளா் அணி செயலாளராகவும், 26 ஆண்டு காலமாக மின் கழகத்தின் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வந்தாா்.
அவருக்கு பிரேமாமணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். சிங்கார ரத்தின சபாபதியின் உடல் வெள்ளிக்கிழமை புது ஆவடி சாலையில் உள்ள சத்யாநகா் மயானத்தில் தகனம் செய்யப்படும்.