தமிழகத்தில் 50 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பி க்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பி க்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக சென்னை அயனாவரம் உதவி ஆணையா் பாலமுருகன், அண்ணாநகருக்கும், சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் அயனாவரத்துக்கும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையா் கெளதமன் அடையாறுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 50 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com