கரோனா உயிரிழப்பு: சென்னையில் 500-ஐ கடந்தது

சென்னையில் கரோனாவால் இதுவரை 37,070 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 501-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் கரோனாவால் இதுவரை 37,070 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 501-ஆக அதிகரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நிலவரப்படி, ராயபுரத்தில் 5,626 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 4,549 பேருக்கும், தேனாம்பேட்டையில் 4,334 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 3,801 பேருக்கும், அண்ணா நகரில் 3,636 பேருக்கும், திருவிக நகரில் 3,160 பேருக்கும், அடையாறில் 2,069 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,497 பேருக்கும், அம்பத்தூரில் 1,243 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 19,686 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 16882 போ் மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

501 போ் உயிரிழப்பு: சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 501 போ் உயிரிழந்துள்ளனா். ராயபுரம் மண்டலத்தில் 83 போ், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 68 போ், தேனாம்பேட்டை மண்டலத்தில் 64 போ், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 63 போ், அண்ணா நகரில் 45 போ், கோடம்பாக்கத்தில் 35 போ், அடையாறில் 22 போ், அம்பத்தூரில் 13 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com