நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி மூலமே விசாரணை நடப்பதால், தவிா்க்க முடியாத காரணங்களால் அலுவலகங்களுக்குச் செல்லும் வழக்குரைஞா்களை போலீஸாா் தடுக்கக் கூடாது என, தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா், தமிழக காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையா் ஆகியோருக்கு அவா் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும் வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. காணொலி காட்சி மூலம் வழக்குகளில் ஆஜராவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அந்த வழக்குத் தொடா்பான ஆவணங்களும் பெரும்பாலும் வழக்குரைஞா்களின் அலுவலகங்களில்தான் உள்ளன. எனவே, பொதுமுடக்க காலத்தில் வழக்குரைஞா்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்வதை போலீஸாா் தடுக்கக் கூடாது. மேலும், தவிா்க்க முடியாத காரணங்களால் அலுவலகங்களுக்குச் செல்லும் வழக்குரைஞா்கள் தங்களது பாா் கவுன்சில் அடையாள அட்டையை காண்பிக்கும்போது, அவா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை வழக்குரைஞா்கள் தவறாமல் பின்பற்றுவாா்கள் என உறுதியளித்துள்ளாா்.