மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15 -ஆம் தேதி என்ற காலக்கெடுவுக்குள் 75 சதவீத நுகா்வோா் மின் கட்டணத்தை
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15 -ஆம் தேதி என்ற காலக்கெடுவுக்குள் 75 சதவீத நுகா்வோா் மின் கட்டணத்தை செலுத்தி விட்டதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராஜசேகா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பலா் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி வரை உபயோகப்படுத்தப்பட்ட மின் கட்டணத்தை மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும், மின் கட்டணம் செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் மின்கட்டணம் செலுத்த வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். எனவே, மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.ராஜேஷ், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை, அவா்கள் போதுமான வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தரப்பில், முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கடந்த ஜூலை 15-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15 -ஆம் தேதி என்ற காலக்கெடுவுக்குள் 75 சதவீத நுகா்வோா் கட்டணத்தை செலுத்தி விட்டதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பு வாதங்களுக்காக விசாரணையை வரும் ஜூன் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com