சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்ததாக தலைமைச் செயலக ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஊழியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் என 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுக்க ரூ. 3,000 முதல் ரூ.5,000 வரை மக்களிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, போலி இ-பாஸ் மூலம் பொதுமக்கள் வெளியே செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.