தமிழ்நாடு
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணன் மறைவு: முதல்வர் இரங்கல்
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கிருஷ்ணன் 27.6.2020 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனைஅடைந்தேன்.
விழுப்புரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பி.கிருஷ்ணன் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, விழுப்புரம் மக்களின் நலன்களுக்காக உழைத்தவர்.
பி. கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.