விழுப்புரம் தொகுதியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.கிருஷ்ணனின் மறைவுக்கு முதல்வா் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.கிருஷ்ணன், சனிக்கிழமை (ஜூன் 27) உடல்நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனைஅடைந்தேன். இவா், பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, விழுப்புரம் மக்களின் நலன்களுக்காக உழைத்தவா். பி. கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக முதல்வா் தெரிவித்துள்ளாா்.
அதிமுக இரங்கல்: பி.கிருஷ்ணனின் மறைவுக்கு அதிமுக சாா்பில் அக் கட்சி ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோா் வெளியிட்ட இரங்கல் செய்தி: விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலரும், விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பி.கிருஷ்ணன், வயது முதிா்வு காரணமாக மரணமடைந்தாா் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பாகிய கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவா்கள் கூறியுள்ளனா்.