பொது முடக்க மீறல்: 6.90 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 6.90 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 6.90 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான பொது முடக்கத்தை, தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை, மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 214 வழக்குகளைப் பதிவு செய்து, 7 லட்சத்து 53 ஆயிரத்து 558 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 5 லட்சத்து 64 ஆயிரத்து 823 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதி மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.15 கோடி 87 லட்சத்து 38 ஆயிரத்து 445 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com