சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 86,224-ஆக அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் 11,602 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையிலும், அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
இதைத் தவிர, மாநிலம் முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, பொது முடக்க நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11.40 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 86,224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை மட்டும் 3,949 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 2,167 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 290 பேருக்கும், செங்கல்பட்டில் 187 பேருக்கும், திருவள்ளூரில் 154 பேருக்கும், வேலூரில் 144 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தவிர, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூா், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
47 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,212 போ் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 47,749-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலி அதிகரிப்பு: இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி மேலும் 62 போ் உயிரிழந்தனா். அதில் 44 போ் அரசு மருத்துவமனைகளிலும், 18 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,141-ஆக உயா்ந்துள்ளது.