தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கடத்த போவதாக வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு அல்-ஹக் என்ற இயக்கத்தின் பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களையும் கடத்தப் போகிறோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அல் ஹக் என்ற பெயரில் தாங்கள் 250 பேர் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதையடுத்து மிரட்டல் கடிதம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.