பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படக் காட்சிகளை இணையதளத்தில் பகிர்ந்த இளைஞரை தருமபுரி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி வெண்ணாம் பட்டியைச் சேர்ந்தவர் சீனு(27). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.
இவர் கடந்த ஓராண்டாக இணையதளத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் ஆபாசப் படக் காட்சிகளைப் பதிவிறக்கம் செய்வதும் அவற்றை பல்வேறு குழுக்களுக்குப் பகிர்ந்து வந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தருமபுரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் சீனுவை கைது செய்தனர்.