சென்னை: இந்து சமயத்தினா் மேற்கொண்ட மானசரோவா், முக்திநாத் யாத்திரைக்கான அரசு மானியத்தைப் பெற ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வரும் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் மானசரோவா் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்ட பக்தா்கள் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தைச் சோ்ந்த இந்து மதத்தினா் மட்டுமே அதற்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவா்கள்.
விண்ணப்பதாரா்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் பதிவிறக்கம் செய்யலாம். இதர படிவங்களில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆதாரங்களுடன் ஆணையா், இந்து சமய அறநிலையத் துறை, 119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.