வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரை 2வது ரயில்வே தண்டவாளத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

வாஞ்சி மணியாச்சி முதல்  தட்டப்பாறை வரை இரண்டாவது ரயில்வே தண்டவாளத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ரெயில் சோதனை ஓட்டம்
ரெயில் சோதனை ஓட்டம்

மணியாச்சி: வாஞ்சி மணியாச்சி முதல்  தட்டப்பாறை வரை இரண்டாவது ரயில்வே தண்டவாளத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல் தட்டப்பாறை வரை 35கிலோ மீட்டர் தூரம் வரை 2வது ரயில்வே தண்டவாள பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் வாஞ்சி மணியாச்சி முதல்  தட்டப்பாறை வரை ரயில்வே தண்டவாளத்தில் ரயில் சோதனை ஓட்டம் இன்று மாலை 4.40 மணியளவில் தொடங்கியது.

இதில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ. மனோகரன் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சோதனை ஓட்ட ரயில் இன்ஜினுக்கு  வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு   தேங்காய் உடைத்து கற்பூர தீபமேற்றி பூசணிக்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com