சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தொடங்குவதில் தீவிரம் காட்டி வந்த நடிகா் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டம் குறித்து அறிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பயணம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தான் முதல்வராக பொறுப்பேற்க மாட்டேன் என்றும், தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையோ விருப்பமோ இல்லை என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசியல் புரட்சி வெடிக்க வேண்டும், இது நாடு முழுவதும் பரவ வேண்டும் என்றும், இப்போது நடக்கவில்லை என்றால், எப்போதும் நடக்காது என்றும் அவர் கூறினார்.
அதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டதைப் பார்த்த பிறகே நான் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினிகாந்த், அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் எப்படி நான் அரசியலுக்கு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
பல்வேறு தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய பிறகே நடிகர் ரஜினிகாந்த், சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், புறக்கணித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


