தரமணியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தரமணியில் ஷேர் ஆட்டோ ஒன்று தொழிலாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இதில் மூர்த்தி(51) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.