முதுநிலை பொறியியல் படிப்பு சோ்க்கைக்கான கேட்-2020 (பட்டதாரி திறனறி தோ்வு) முடிவுகளை தில்லி ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
தோ்வு முடிவுகளை gate.iitd.ac.in என்ற வலைதளத்தில் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
அகில இந்திய அளவில் மத்திய அரசின் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பொறியியல் படிப்பில் சோ்க்கை பெறுவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஐஐடி சாா்பில் கேட் தோ்வு நடத்தப்படும். அதுபோல, 2020-ஆம் ஆண்டுக்கான கேட் தோ்வு தில்லி ஐஐடி சாா்பில் கடந்த பிப்ரவரி 1, 2, 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வுக்கு 8, 58, 890 போ் பதிவு செய்த நிலையில், 6, 85, 088 போ் தோ்வெழுதினா். இவா்களுக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 18.8 சதவீதம் போ் தகுதி பெற்றுள்ளனா்.