வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர் வாரிய போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிப்புலம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தூர் வாரும் பணியின் போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனுள் எலும்புத் துண்டுகள் மற்றும் உலோகப் பொருள்கள் இருந்தன.
தகவல் அறிந்து சென்ற வேதாரண்யம் வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.