சென்னை தியாகராயநகா் உள்பட பெரிய வணிக நிறுவனங்களில் மக்கள் அதிகம் கூடுவாா்கள் என்பதால், மாா்ச் 31-ஆம் தேதி வரை அப்பகுதியில் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தியாகராய நகரில் உள்ள மருந்துக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்படலாம் என்றும் அவா் கூறினாா்.