ஆந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தமிழ்நாட்டிலிருந்தும் இளைஞர்கள் பலர் இங்கு வந்து நீராடி, நீச்சல் அடித்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரதய்யபாளையத்திற்கு பொன்னேரி அருகில் உள்ள அருமந்த கிராமத்தை சேர்ந்த கெளதம் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் புறப்பட்டார். வழியில் மிட்டய்யபாளையம் அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றருகில் நின்ற நண்பர்கள் அங்கு நீச்சல் அடிக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் நீச்சல் அடிக்க கிணற்றுக்குள் குத்தினர். அதில் கெளதம் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்யவேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவத்தின் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.