சென்னை: தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஆறு பேருக்குமே தமிழகத்தில் தொற்று பரவவில்லை. ஆறு பேருமே கரோனா பாதித்த நாடுகளில் இருந்து பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குள் வந்தவர்கள்.
மேலும், அனைத்து துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், தமிழக எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.