திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்தன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புதுறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் குமார், இருதயராஜ் உட்பட 5 பேரின் குடிசை வீடுகள் எரிந்தன.