மதுரவாயல்: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மாடியில் இருந்து வீசிய கொடூரம்

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 3வது மாடியில் இருந்து வீசிக் கொலை செய்த கொடூரம் நடந்தேறியுள்ளது.
மதுரவாயல்: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மாடியில் இருந்து வீசிய கொடூரம்


சென்னை: சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 3வது மாடியில் இருந்து வீசிக் கொலை செய்த கொடூரம் நடந்தேறியுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட அதே நாளில், சென்னையை அடுத்த மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 3வது மாடியில் இருந்து வீசிக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

இரவு உடல் உபாதையைக் கழிக்க வெளியேச் சென்ற 10 வயது சிறுமி வீடு திரும்பாததை அடுத்து, அக்கம் பக்கத்தில் தேடிய பெற்றோர், எங்கும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சுரேஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சுரேஷிடம் நடத்திய விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அவர் கத்தியதால், மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து, சிறுமியை 3வது மாடியில் இருந்து வீசி கொலை செய்த கொடூரத்தை ஒப்புக் கொண்டார்.

உடனடியாக சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டு, சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com