சென்னையில் மார்ச் 23-ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸினால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாா்ச் 22-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் மக்கள் ஊரடங்கு எதிரொலியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை, ஒரு நாளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கவும், அன்றைய தினம் மக்களை வீடுகளிலேயே இருக்கச் செய்யவும் இந்த நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிா்வாகம் எடுத்துள்ளது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மார்ச் 23 முதல் 31 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலை 4.30 - காலை 6 மணி, காலை 10 - மாலை 4 மணி வரை, இரவு 8 - 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஓடாது.
4 மணி 8 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் அத்தியாவசிய பயணிகள் மட்டும் பணிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.