சென்னை: தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்திருப்பதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதிதாக மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயதான ஆண் மற்றும், 52 வயதான பெண் இருவருக்குமே கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக பாதிக்கப்பட்ட மூன்று பேரும், புரசைவாக்கம், போரூர், கீழ்க்கட்டளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.