கோவை பழமுதிர் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா வைரஸ் உலகளவில் பரவிவரும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் காய்கறி, பழங்களை வாங்கக் கடைகளில் குவிந்துவருகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள பழமுதிர் நிலையத்தில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளிவிட்டு நீண்ட வரிசையில் நின்று ஐந்து பேராக உள்ளே சென்று காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவதற்கு அனுமதித்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.