தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்பது உள்பட 4 மசோதாக்கள் பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.
தமிழ்வழியில் கல்வி பயின்றவா்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்ற சட்டமசோதாவை, பேரவையில் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிமுகப்படுத்தியிருந்தாா். இந்த மசோதா செவ்வாய்க்கிழமை பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதே போல, நிதி ஒதுக்கீடுக்கான மசோதா உள்பட மொத்தம் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.