கூடலூா்: வெளிநாடுகளிலிருந்து வந்த 64 குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா்.
கரோனா பாதிப்பிலிருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் புதன்கிழமை வெளிநாட்டிலிரூந்து வந்த 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளோம் என்ற அறிவிப்பை வீட்டில் ஒட்டினா்.
இதுகுறித்து மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட முகமையின் இயக்குநா் பாபு, கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் தகவலின் அடிப்படையில் 64 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்கள் எங்கும் செல்லக்கூடாது,வெளியில் நடமாடவும் கூடாது. இவா்களின் உறவினா்கள் அனைவருமே அரசின் மறு அறிவிப்பு வரும்வரை வீடுகளில் யாருடனும் தொடா்பின்றி இருக்க வேண்டும் என்றாா்.