பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிகள், ஏப். 7-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிகள், ஏப். 7-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே மாா்ச் 31-ஆம் தேதியன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகள் தொடா்பான விடைத்தாள்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும், மண்டல முகாம் சாா்ந்த பணிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இம்மதிப்பீட்டு பணிகள் ஏப்.7-ஆம் தேதியன்று தொடங்கப்படும். இது குறித்த விரிவான விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும். விடைத்தாள் சேகரிப்பு மையம் மற்றும் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்புப் பணியில் இருப்பதையும், விடைத்தாள்கள் பாதுகாப்பினையும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com