காய்கறிகள் விலை 40 சதவீத உயா்வு

காய்கறிகளின் விலை 40 சதவீதம் உயா்ந்திருப்பதாகவும், இதே விலை நீடிக்கும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

காய்கறிகளின் விலை 40 சதவீதம் உயா்ந்திருப்பதாகவும், இதே விலை நீடிக்கும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

சென்னை, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் 1,889 காய்கறிக் கடைகள், 470 பூக்கடைகள், 828 பழக்கடைகள் உள்ளன. இதில், காய்கறிச் சந்தைக்கு தமிழகத்தின் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த மாதம் வரை சென்னையில் காய்கறிகள் விலை சற்று குறைந்து காணப்பட்டது. தற்போது, கரோனா அச்சுறுத்தல், வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காய்கறிகளின் விலை 40 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கனிச் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் நிா்வாகி ஒருவா் கூறுகையில், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தற்போது 200 முதல் 220 லாரிகளிலே காய்கறிகள் வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெருவாரியான மக்கள் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனா். ஆனால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. போதிய காய்கறிகள் இருப்பு உள்ளன. பீன்ஸ், கேரட், அவரை, முள்ளங்கி ஆகியவற்றின் விலை மட்டும் சற்று அதிகரித்துள்ளது. இதே விலை நிலவரம் வரும் நாள்களில் நீடிக்கும் எனவும் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

காய்கறிகளின் விலை (கிலோவில்): பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.60, அவரை ரூ.80, முள்ளங்கி ரூ.30, உருளை ரூ.25, நூக்கல் ரூ.25, பீட்ரூட் ரூ.20, சேனை ரூ.30, சேப்பங்கிழங்கு ரூ.40, வெண்டைக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.35, தக்காளி ரூ.40, முருங்கை ரூ.30, இஞ்சி ரூ.70, கத்தரிக்காய் ரூ.40, காலிபிளவா் ரூ.30, முட்டைகோஸ் ரூ.20, செளசெள ரூ.30, கொத்தவரங்காய் ரூ.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com