விழுப்புரத்தில் பகல் 12 மணியோடு அத்தியாவசிய கடைகளை மூட காவலர் அறிவுறுத்தல்

விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவு இரண்டாம் நாள், மளிகைக் கடைகள், காய்கறி
விழுப்புரத்தில் பகல் 12 மணியோடு அத்தியாவசிய கடைகளை மூட காவலர் அறிவுறுத்தல்

விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவு இரண்டாம் நாள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.. காலை முதல் பிற்பகல் வரை வழக்கமான மக்கள் கூட்டம் உள்ளது.

ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பொருள்கள் வாங்கும்படி போலீசார் எச்சரிக்கின்றனர். வியாபாரிகளைப் பின்பற்றச் சொல்லி வலியுறுத்துகின்றனர். ஆனாலும் மக்கள் கூட்டமாகச் சென்று இக்கடைகளில் பொருளை வாங்கி வருகின்றனர்.

முக்கியச் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்வதை போலீசார் விரட்டி வருகின்றனர். பகல் 12 மணியோடு அத்தியாவசிய கடைகளை மூட போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com