நோய் தடுப்பு கருவிகள் வாங்க தமிழக அரசுக்கு ரூ.3 கோடி அன்புமணி

நோய்த் தடுப்புப் பணிகளுக்கான கருவிகள் வாங்க நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழக அரசுக்கு ரூ.3 கோடியை ஒதுக்குவதாக பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

நோய்த் தடுப்புப் பணிகளுக்கான கருவிகள் வாங்க நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழக அரசுக்கு ரூ.3 கோடியை ஒதுக்குவதாக பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் என்ற கொடிய நோய் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

இதற்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியும், மாநில அரசுகள் பல்லாயிரம் கோடியும் நிதி ஒதுக்கியுள்ள போதிலும், கரோனா வைரஸ் நோயின் புதிய பரிமாணம் காரணமாகவும், பிற நோய்களைத் தடுக்கும் முறைகளில் இருந்து இந்நோயைச் சோதித்து, தடுக்கும் முறை மாறுபட்டது என்பதாலும், அது போதுமானதல்ல.

கரோனா வைரஸால் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்களா என்பதைக் கண்டறிவதற்கான தொ்மல் ஸ்கேனா்கள், நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள், கரோனா சோதனைக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நீக்கும் மருந்துகள் மற்றும் கரோனா நோயைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழக அரசுக்குப் பெருந்தொகை தேவைப்படுகிறது.

தமிழக அரசின் நோய்த் தடுப்புப் பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொருத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்கத் தயாராக உள்ளேன் என்றும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com