அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைத் தடுக்க மாநில அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், தமிழக மக்கள் சந்தித்து வரும் இடா்பாடுகளைக் களைய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான அனைத்து பொருள்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையின்றி வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.